காரை நலன்புரிச் சங்கம் அண்மையில் புதியதோர் நீர் வழங்கல் தாங்கி ஒன்றை கொள்வனவு செய்ததை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள். கடந்த ஐந்தாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த நீர்த் தாங்கிக்கு பதிலாக புதியதொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு லண்டன் நலன்புரிச் சங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்ட தாங்கி பலத்த தேய்மானம் காரணமாக தொடர்ந்தும் பயன்படுத்த முடியாத நிலையை அடைந்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளின் கோடை காலத்தில் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் சுன்னாகத்திலிருந்து எமது கிராமத்துக்கு நீரேந்தி வந்த இத் தாங்கி முதன்மையான அடிப்படைச் சேவையினை எம் கிராமத்துக்கு இது ஆற்றியது. இதனால் ஏற்பட்ட கடின பயன்பாடும், எமது கடல்சார் கிராமச் சுற்றுச் சூழலும் அதன் தேய்மானத்துக்கு முக்கிய காரணங்கள் என்பதை இங்கு விளக்க வேண்டியதில்லை.
இன் நிலையில் எமது லண்டன் நலன்புரிச் சங்கம் இவ்வாண்டு ஜூன் மாதம் புதிய நீர்த் தாங்கியை லண்டனில் கொள்வன்வு செய்து காரை நகருக்கு அனுப்பியது. அங்கு புதிய அசோக் லேலண்ட் வாகனத்தோடு தாங்கி இணைக்கப் பட்டுள்ளது. . 13,500 லீட்டர் தாங்கவல்ல கறைபடியாத இத்தாங்கிக்கும் வாகனத்துக்குமாக அண்ணளவாக £28,000 பவுண்ஸ்கள் செலவீடு செய்யப் பட்டுள்ளது. எமது கிராமமான காரைனகரில் தற்போது 14,000 மக்கள் சராசரியாக குடிவாழ்கிறார்கள் என ,மதிப்பிடப் பட்டுள்ளது. இத்தொகை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. அங்கு குடி வாழ்வோரில் அரைவாசிக்கும் அதிகமானோர் எமது நீர்த்தாங்கி சேவையினூடாக பயன் பெற்று வருகிறார்கள்.
நாளொன்றுக்கு 20,000 லீட்டர் நீர் வழங்கப் பட்டு வருகிறது. 165க்கு அதிகமான தனி நபர் உள்ளிட்ட தரிப்பிடங்களில் இந்த நீர் வினியோகம் மேற் கொள்ளப் படுகிறது. ஒவ்வோர் இடத்திலும் 100 முதல் 2000 லீட்டர் வரையிலான நீர் வழங்கப் படுகிறது. இச்சேவையின் செயற்பாட்டுச் செலவை ஈடு செய்யும் வகையில் ஒவ்வொரு லீட்டருக்கும் தலா 50 சதம் அறவீடு செய்யப்படுவதையும் இங்கு குறிப்பிட வேண்டும். கடந்த காலங்களில் பயன்பட்ட தாங்கியை விற்பனை செய்ய எமது நிர்வாகம் தற்போது திட்டமிட்டுள்ளது. இவ்விற்பனையின் மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி சிறிய நீர்த்தாங்கிகளை கொள்வனவு செய்ய திட்டம் தீட்டி உள்ளோம். இச் சிறிய தாங்கிகள், நீர்த்தாங்கி வாகனம் நுழைய முடியாத மிகச் சிறிய ஒழுங்கைகளில் குடியிருக்கும் மக்களுக்கு இலகுவான முறையில் நீர் வினியோகிக்க பயன்படுத்தப்படும்.
தற்போது எம்மால் வடிவமைக்கப்பட்டுள்ள திட்டத்தின் மூலம் குறித்த இந்த நீர் வழங்கள் சேவையினால் ஈட்டப்படும் பணம் அச்சேவைக்கான எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யும் சுய மூலதனத்தைச் சேமித்துத் தானே ஈடு செய்யும் என நம்புகிறோம். இதனால் இத்திட்டத்திற்கான எதிர்கால தேவைகளுக்காக மீண்டும் உங்களிடம் நிதி திரட்டுமம் தேவை சங்கத்திற்கு ஏற்படாது என நம்புகிறோம். புதிய நீர்த்தாங்க்கிக்கான கொள்முதற் செலவை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் நிதி நிலை எமது நலன்புரிச் சங்கத்திடம் இருக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆயினும் காலத்தின் தேவை கருதி நலன் விரும்பிகள் சிலர் வட்டியற்ற கடனாக குறித்த செலவை தாங்கிக் கொண்டனர். இக்கடனை மீளளிப்பது எமது கடமையாகும்.
எனவே குறித்த அத் தொகையை ஈடு செய்யும் வகையில் எம் அங்கத்தவர்களாகிய உங்களிடம் இருந்தும் நலன் விரும்பிகளிடம் இருந்தும் நிதி அன்பளிப்புக்களை எமது சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் சார்பில் நான் இத்தால் வேண்டி நிற்கிறேன்.
நன்றிகள்.
V.ehNfe;jpud;
,j;jpl;lj;jpw;fhd Nkyjpf tpguq;fSf;Fk; ed;nfhilfSf;Fk; njhlh;G nfhs;s Ntz;ba md;gh;fs; - V.ehNfe;jpud; 07771635703, R.Re;jujhrd; 07969872383,P .jtuh[h 07951950853, S.NfhNdrypq;fk; 07944232014, T.Njthde;jk; 07931793895
No comments:
Post a Comment